மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தோனியின் முகநூல் பதிவுக்கு காரணம் இதுதான்! ரசிகர்கள் ஏமாற்றம்!

சமீபத்திய முகநூல் பதிவிற்கான காரணத்தை விளக்கும் விடியோவினை எம்.எஸ்.தோனி பதிவிட்டுள்ளார்.

தோனியின் புதிய விளம்பரப் புகைப்படங்கள். - படங்கள்: முகநூல் / தோனி

Published On :

சமீபத்திய முகநூல் பதிவிற்கான காரணத்தை விளக்கும் விடியோவினை எம்.எஸ்.தோனி பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 42 வயதாகும் தோனி இந்த முறை ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் பக்லருக்கும் இருக்கிறது.

கடந்தாண்டு முட்டி வலியால் பாதிக்கப்பட்ட தோனி அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருக்கிறார்.

சமீபத்திய எம்.எஸ்.தோனியின் சூசகமான முகநூல் பதிவால், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்தன. “புதிய சீசன் மற்றும் புதிய 'ரோல்'க்காக காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்!” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜியோவிற்கான விளம்பரம் ஒன்றில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை ஜியோவில் இலவசமாக பார்க்கலாம்

விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள தோனியின் இந்த யுக்தியை முன்னமே சில ரசிகர்கள் கணித்தாலும் சில ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.