ரிஷப் பந்த் தெரியுமா?: பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ரிஷப் பந்த் தெரியுமா?: பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் 3-1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

ரிஷப் பந்த் தெரியுமா?: பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்!
100-ஆவது டெஸ்ட்டில் அஸ்வின், போ்ஸ்டோ

இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி மோசமாக விமர்சனத்துக்குள்ளானது. அதே வேளையில் பென் டக்கெட் ஜெய்வால் ஆடிய விதத்துக்கு எங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும், “மற்ற அணியின் வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “எங்கள் அணியில் ரிஷப் பந்த் என்று ஒருவர் இருக்கிறார். அநேகமாக ரிஷப் விளையாடியதை பென் டக்கெட் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

ரிஷப் பந்த்திற்கும் முன்னோடி ஷேவாக் இருக்கிறார் என இந்திய ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com