ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Published On :10 மார்ச் 2024, 4:56 pm IST

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி அதன்பின் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 122 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 117 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 111 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும் முதலிடம் பெற்றுள்ளது. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 121 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 110 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. டி20 அணிகளுக்கான தரவரிசையில் 266 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 256 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 255 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் இந்திய அணி 68.51 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.