லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பர் இல்லை!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பரின் பெயர் இடம்பெறவில்லை.

Published On :26 மார்ச் 2024, 7:50 pm IST

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பரின் பெயர் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2024-25 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் அடங்கிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜெரால்டு கோட்ஸீ இடம்பெற்றுள்ளார்.

அவருக்கான ஒப்பந்த காலம் 2024-25 முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான நண்ட்ரே பர்கரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக்கின் பெயர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டி காக் அறிவித்தார். இந்த நிலையில், கிரிக்கெட் ஒப்பந்தப் பட்டியலில் டி காக் பெயர் இடம்பெறாதது முக்கியத்துவம் பெறுகிறது.

குயிண்டன் டி காக்

குயிண்டன் டி காக்

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 594 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் டி காக் மூன்றாமிடம் பிடித்தார். உலகக் கோப்பைத் தொடரில் டி காக் 4 சதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.