
முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை பாகிஸ்தான் அணி 16.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 75 ரன்களும், ஃபகர் ஸமான் 78 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மே 14) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.