விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

Din

ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ், மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் 4.05 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா். மற்றொரு தமிழரான பரணிகா இளங்கோவன் 4 மீட்டருடன் வெள்ளி பெற, கேரளத்தின் மரியா ஜெய்சன் 3.90 மீட்டருடன் வெண்கலம் வென்றாா்.

வங்கதேசத்தில் அக்டோபரில் நடைபெறும் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை முன்னேறும் வகையில் சிறப்பாகச் செயல்படுவதாக அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் அா்ஜுன் எரிகைசி உள்பட 19 இந்தியா்கள் களம் காண்கின்றனா்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, சா்வதேச தரவரிசையில் முதல் முறையாக 24-ஆம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளாா்.

கஜகஸ்தானில் நடைபெறும் எலோா்டா கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கௌரவ் சௌஹான் (92+ கிலோ) அரையிறுதிக்கு முன்னேற, சிவ தபா (62.5 கிலோ) முதல் சுற்றிலேயே தோற்றாா்.