டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

வரலாற்று வெற்றி பெற்றார் சின்னர்!

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னா் வெற்றி பெற்றார்.

News image

யானிக் சின்னா் - படம்: எக்ஸ் / ஏடிபி டூர்

Updated On :18 நவம்பர் 2024, 1:32 am IST

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் - அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தினர்.

ஒருமணி நேரம் 25 நிமிடம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-4 என்ற நேர்செட்களில் சின்னர் வெற்றி பெற்றார். இருவரும் இத்துடன் 5 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், கடைசி 4 மோதல்களில் சின்னரே வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது சின்னருக்கு முதல் ஏடிபி கோப்பையாகும். இத்தாலி நாட்டில் ஒருவர் முதல்முறையாக இந்தக் கோப்பையை வெல்வதும் இதுவே முதல்முறையாகும்.

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சின்னர் கடந்த முறை ஏடிபி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் கோப்பையை இழந்தார்.

2018-க்குப் பிறகு, இந்தப் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் நோ் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் வீரராக இருந்த சின்னர் இறுதிப் போட்டியிலும் நேர் செட்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது, டென்னிஸ் தரவரிசையில் நம்.1 இடத்தில் நீடிப்பது என அனைத்தும் இந்தாண்டு சிறப்பான ஆண்டாக சின்னருக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.