கால்பந்து உலகில் மிகவும் புகழ்பெற்ற வீரர் லயோனல் மெஸ்ஸி. 8 முறை பேலன்தோர் விருது (தங்கப் பந்து) பெற்று அசத்தியுள்ளார்.
கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடிவருகிறார். அவரது சிறப்பான பங்களிப்பினால் இன்டர்மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ்-இன் சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸியன் மகன் தியாகோ மெஸ்ஸி 12 வயதாகிறது. ஆர்ஜென்டீனாவில் நேவெல்ஸ் கோப்பைக்கான 13 வயதுக்குட்பட்டோருக்கான இன்டர்மியாமி அணியில் விளையாடுகிறார்.
வடக்கு, தென் அமெரிக்காவிலுள்ள 8 கிளப் அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் 5 நாள்கள் நடைபெறுகின்றன.
தந்தையின் ஜெர்ஸி எண் 10 உடன் மகன் தியாகோ மெஸ்ஸியும் களமிறங்குகிறார்.
Thiago Messi facing Newell's Old Boys in Rosario in front of a giant banner of his dad 𥺠pic.twitter.com/mthYnFUVbx
— B/R Football (@brfootball) November 25, 2024
மெஸ்ஸி ரோசாரியோவில் பிறந்தவர். நேவெல்ஸ் ஓல்டுபாய் சார்பாக 5 வருடம் விளையாடிய மெஸ்ஸி பின்னர் 13 வயதில் பார்சிலோனா அணியில் சேர்ந்தார்.
37 வயதாகும் மெஸ்ஸி அதிகமான போட்டிகள் பார்சிலோனாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்டர்மியாமியில் விளையாடுகிறார்.
இந்தப் போட்டியை தியோகோ மெஸ்ஸியின் அம்மா, அவரது தந்தை, தாத்தா பாட்டியுடன் பார்வையிட்டார்கள். இதில் நேவேல்ஸ் அணி 1-0 என இன்டர்மியாமியை வீழ்த்தியது.
இவர்களுடன் இன்டர் மியாமி ஸ்டிரைக்கர் லூயிஸ் சௌரேஜ் மகன் பெஞ்சமின் சய்ரேஜ் தியாகோ மெஸ்ஸியுடன் விளையாடினார். அடுத்தபோட்டி உருகுவே கிளப் அணியுடன் இன்று நடைபெறுகிறது.
இதுவரை, தியாகோ மெஸ்ஸி 12 வயதுக்குட்பட்டோருக்கான 6 போட்டிகளில் 13 கோல்கள், 7 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thiago Messi holding down the number ð playing against Newell's Old Boys in front of a large banner of his father. ð¦ð·ð
— SPORF (@Sporf) November 26, 2024
Although his dad was not in attendance at the game Lionel Messi and Luis Suárez have been in Rosario enjoy their time off. ð pic.twitter.com/uoAnydv59g
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






