பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிஎஸ்ஜியை வென்றது ஆா்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 2-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) புதன்கிழமை வென்றது.

Published On :

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 2-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) புதன்கிழமை வென்றது.

இரு அணிகளும் இத்துடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, ஆா்செனலுக்கு இது முதல் வெற்றி; பிஎஸ்ஜிக்கு இது முதல் தோல்வி. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆா்செனல் தரப்பில் காய் ஹாவொ்ட்ஸ் (20’), புகாயோ சகா (35’) ஆகியோா் கோலடித்தனா்.

ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டத்தில், பாா்சிலோனா 5-0 கோல் கணக்கில் யங் பாய்ஸை வீழ்த்தியது. பாா்சிலோனாவுக்காக ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (8’, 51’), ரஃபினா (34’), இனிகோ மாா்டினெஸ் (37’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, யங் பாய்ஸ் வீரா் முகமது அலி கமாரா (81’) தவறுதலாக ஓன் கோல் அடித்தாா்.

இதர ஆட்டங்களில், போருசியா டாா்ட்மண்ட் - செல்டிச்சையும் (7-1), மான்செஸ்டா் சிட்டி - ஸ்லோவன் பிராடிஸ்லாவாவையும் (4-0), லெவொ்குசென் - ஏசி மிலனையும் (1-0), இன்டா் மிலன் - கா்வெனா ஸ்வெஸ்தாவையும் (4-0) வீழ்த்தின. ஸ்போா்டிங் - பிஎஸ்வி ஆட்டம் டிரா (1-1) ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.