சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி! வரலாற்றுச் சாதனை!

விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை பாராலிம்பிக்கில் படைத்தார்.

News image

இறுதிப் போட்டியில் ஜோடி கிரின்ஹாம் - படம்: எக்ஸ்

Updated On :1 செப்டம்பர் 2024, 9:59 pm IST

பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜோடி கிரின்ஹாம், பாராலிம்பிக் போட்டியில் இன்று (செப். 1) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பாராலிம்பிக் தொடரில் படைத்துள்ளார்.

7 மாத கர்ப்பிணியான அவர், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த வில் வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம். 31 வயதாகும் 7 மாத கர்ப்பிணியான இவர், பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் பிரிட்டன் சார்பில் பங்கேற்றார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதே நாட்டைச் சேர்ந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பங்கேற்று பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பெற்றுள்ளார்.

பதக்கம் வென்றது குறித்து பேசிய ஜோடி கிரின்ஹாம், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஜூலை மாதம் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில், எகிப்திய வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.