சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்) - படம் | மன்சுக் மாண்டவியா (எக்ஸ்)

Updated On :10 செப்டம்பர் 2024, 4:49 pm IST

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் அண்மையில் நிறைவடைந்தன. பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா கடந்த பாராலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் அதிக அளவிலான பதக்கங்களை வென்று குவித்தது. 29 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.

இந்த நிலையில், பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிசுத் தொகையினை அறிவித்தார்.

தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

பாராலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களை பாராட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பாராலிம்பிக் மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் நாடு முன்னேறி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 4 பதக்கங்கள் வென்றோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்றிருந்தோம். இந்த முறை பாரீஸ் பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளோம்.

நமது பாராலிம்பிக் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் செய்துதர முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக அளவிலான பதக்கங்களை வெல்லும் என்றார்.

50 பதக்கங்கள்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் அதிகபட்ச பதக்கங்கள் இதுவாகும். அதேபோல, பாராலிம்பிக் வரலாற்றில் 50 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.