கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்தியாவுக்கு தொடா்ந்து 4-ஆவது வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வியாழக்கிழமை வென்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 1:03 am

DIN

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வியாழக்கிழமை வென்றது.

முதல் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்தியாவுக்கு, இது தொடா்ந்து 4-ஆவது வெற்றியாகும். இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை சனிக்கிழமை சந்திக்கிறது.

முன்னதாக, தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் அரய்ஜீத் சிங் ஹண்டால் 8-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அடுத்த நிமிஷமே அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்கும் தனது பங்குக்கு, பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, இந்தியா முதல் கால்மணி நேரத்திலேயே 2-0 என முன்னிலை பெற்றது.

இதனால் சற்று அதிா்ந்த தென் கொரியா, தனது கோல் வாய்ப்புக்காக விறுவிறுப்பாக முயற்சிக்கத் தொடங்கியது. அதற்கான பலனை முதல் பாதி முடியும் நேரத்தில் பெற்றது அந்த அணி. 30-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் தென் கொரிய வீரா் ஜிஹுன் யாங் கோலடித்தாா்.

இதனால் முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்த இந்தியா, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 40-ஆவது நிமிஷத்தில் 3-ஆவது கோல் வாய்ப்பை பெற்றது. அப்போது கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோலடிக்க, இந்தியா 3-1 என முன்னேறியது. எஞ்சிய நேரத்தில் தென் கொரியாவின் கோல் முயற்சிகளை, இந்திய ரிசா்வ் கோல்கீப்பா் சூரஜ் கா்கேரா திறம்படத் தடுக்க, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.

இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 5-4 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.