உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

செஸ் ஒலிம்பியாட்: சீனாவை வீழ்த்திய இந்திய அணி முதலிடம் தக்கவைப்பு!

புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தியது.

தமிழக வீரர் டி. குகேஷ். - படம்: எக்ஸ் / ஃபிடே

Published On :

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.

6ஆவது சுற்றில் இந்திய ஆடவா் பிரிவில் இந்திய ஹங்கேரி அணிகள் மோதின. அதில் இந்தியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றது .

7ஆவது சுற்றில் சீனாவுடன் மோதிய ஆடவர் அணி 2.5-1.5 என்ற புள்ளிகளில் வென்றது.

3 இந்தியர்களும் டிராவில் முடிக்க தமிழக வீரர் டி.குகேஷின் வெற்றிதான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ஜியார்ஜியாவுடன் மோதிய இந்திய மகளிரணி 3-1 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. 7 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் இரண்டு அணிகளும் தலா 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கின்றன.

8ஆவது சுற்றில் ஆடவர் அணி ஈரானுடனும் மகளிர் அணி போலந்துடம் மோதுகின்றன.

தங்கம் வெல்லுமா இந்திய அணி?

11 சுற்றுகள் கொண்ட போட்டியில் இன்னும் மீதமிருக்கும் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயமாக தங்கம் வெல்லும்.

கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற வீரர்கள் டிராவில் முடிக்க டி.குகேஷ் தனது 80ஆவது நகர்த்தலில் வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்த்த உலக சாம்பியன் டிங் லிரென் பங்கேற்காவிட்டாலும் சீன அணி அற்புதமாகவே விளையாடியது. சீனா 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.