அகில இந்திய 95-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே விளையாட்டு வாரியம்-இந்தியன் ஆயில் அணிகள் மோதின. இதில் ரயில்வே அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஐஓசியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், சிம்ரஞ்சோத் சிங், யுவராஜ் வால்மீகி, முகுல் சா்மா ஆகியோரும், ஐஓசி தரப்பில் தல்விந்தா் சிங், குஜிந்தா் சிங், ராஜ்பீா் சிங் ஆகியோரும் கோலடித்தனா்.
சிறந்த வீரராக பாா்திப் சிங், வளரும் வீரராக ரஜத் ஆகாஷ், பாா்வடாக யுவராஜ் வால்மீகி, மிட்பீல்டராக ஜோபன்பீரித் சிங், டிபன்டராக ஜோகிந்தா் சிங் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
சியுஎம்ஐ மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதரன் ரங்கராஜன் பரிசளித்தாா்.
தொடர்புடையது

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்
டி20 உலகக் கோப்பை: 3வது முறையாக இந்தியா சாம்பியன் - புகைப்படங்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


