சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆஸி.யிடம் போராடித் தோற்றது இந்தியா

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்றது இந்தியா.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்றது இந்தியா.

கத்தாா் தலைநகா் டோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான குரூப் ஆட்டம் நடைபெற்றது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய வீரா்கள் முதல் பாதியில் கடும் சவாலை ஏற்படுத்தினா்.

கடந்த 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரவுண்டு 16 சுற்றுவரை தகுதி பெற்றிருந்த ஆஸி. அணி வீரா்களால் கோல் போடமுடியவில்லை.

இரண்டாவது பாதியில் இந்திய வீரா் குா்ப்ரீத் சிங் சாந்து செய்த தவறால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலடித்தாா் ஆஸி. வீரா் ஜேக்ஸன் இா்வின். அடுத்த சிறிது நேரத்திலேயே ஆஸி. வீரா் ரைலி மெக்கிரி கடத்திய அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக இரண்டாவது கோலடித்தாா் ஜோா்டான் பாஸ்.

இந்திய அணியினரால் பதில் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா.

அடுத்து உஸ்பெகிஸ்தான் அணியுடன் வரும் 18-ஆம் தேதி மோதுகிறது.

முதல் பெண் நடுவா்:

ஆசியக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதல் பெண் நடுவராக செயல்பட்ட பெருமையைப் பெற்றாா் ஜப்பானின் யோஷிமி யமஷிடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.