திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: 14-வது முறையாக வென்ற பங்கஜ் அத்வானி!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து...

News image

பங்கஜ் அத்வானி

Updated On :20 பிப்ரவரி 2025, 4:54 pm IST

ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல இந்திய வீரரான பங்கஜ் அத்வானி 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப். 15 முதல் பிப். 21 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரரான பங்கஜ் அத்வானி 14-வது முறையாக பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர், சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டங்களுடன், 2 ஆசிய பில்லியர்ட்ஸ் விளையாட்டு தங்கப் பதக்கங்கள் (2006, 2010), ஆகியவற்றுடன் 5 ஆசிய ஸ்னூக்கர் பட்டங்களையும் பங்கஜ் அத்வானி தன்வசம் வைத்துள்ளார்.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரானின் அமிர் சர்கோஷ் உடன் பங்கஜ் அத்வானி விளையாடினார். முன்னாள் ஆசிய சாம்பியனும், 6 முறை உலக ஐபிஎஸ்எஃப் 6-ரெட்ஸ் ஸ்னூக்கர் சாம்பியனுமான அமிர் சர்கோஷ் இறுதி ஆட்டத்தின் முதல் பகுதியில் சற்றே தடுமாறினாலும் பின்னர் ஆட்டத்தைக் கைக்குள் கொண்டு வந்தார். ஆனால், தனது வழக்கமான பாணியில் அழுத்தமின்றி விளையாடிய அத்வானி துல்லியமான ஆட்டத்தால் இறுதியில் வெற்றிபெற்றார்.

இந்த முக்கிய வெற்றியின் மூலம் தேசிய, ஆசிய, சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டங்களை ஒரே ஆண்டில் வெல்வதற்கான சாதனையை அவர் நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்த சாதனையை ஏற்கனவே அவர் செய்துவிட்டதால், ஸ்னூக்கரில் இதனை சாதிக்கும் பட்சத்தில் உலக வரலாற்றில் இத்தகைய சாதனையைச் செய்த முதல் வீரராக பங்கஜ் அத்வானி அறியப்படுவார். வெற்றி குறித்துப் பேசிய பங்கஜ் அத்வானி, “ஸ்னூக்கரில் 14 வது முறை ஆசிய சாம்பியன் கோப்பை வெல்வது எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த முறை ஆட்டம் மிகக் கடினமாக இருந்தது. என்னுடைய சேகரிப்பில் அடுத்த தங்கப் பதக்கத்தைச் சேர்த்துள்ளேன். இதே வேகத்தில் முன்னெடுத்துச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.