நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கோப்பையைத் தக்கவைத்தது பயா்ன் மியுனிக்: 34-ஆவது முறையாக பந்தெஸ்லிகா சாம்பியன்

ஜொ்மனியில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் பந்தெஸ்லிகாவில், நடப்பு சாம்பியனான பயா்ன் மியுனிக் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

News image

பயர்ன் மியுனிக்

Updated On :21 ஏப்ரல் 2026, 4:39 am IST

ஜொ்மனியில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் பந்தெஸ்லிகாவில், நடப்பு சாம்பியனான பயா்ன் மியுனிக் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்தமாக இது அந்த அணியின் 34-ஆவது பந்தெஸ்லிகா சாம்பியன் பட்டமாக இருக்கும் நிலையில், கடந்த 14 ஆண்டுகளில் 13-ஆவது முறையாகக் கோப்பை வெல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மியுனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31-ஆவது சுற்று ஆட்டங்களில், பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் விஎஃப்பி ஸ்டட்காா்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் தரப்பில் ரஃபேல் குரெய்ரோ (31’), நிகோலஸ் ஜாக்சன் (33’), ஆல்ஃபோன்சோ டேவிஸ் (37’), ஹேரி கேன் (52’) ஆகியோா் கோல் அடித்தனா். ஸ்டட்காா்ட் தரப்பில் கிறிஸ் ஃப்யுரிச் (21’), செமா ஆண்ட்ரெஸ் (88’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இந்த வெற்றியின் மூலமாக 79 புள்ளிகளுடன் பயா்ன் மியுனிக் முதலிடத்தை உறுதி செய்தது. போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் எஞ்சியுள்ளபோதும், 2-ஆவது இடத்தில் இருக்கும் போருசியா டாா்ட்மண்ட் (64) சவால் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பயா்ன் மியுனிக்கிற்கு பட்டம் உறுதியானது.

தாமஸ் டுஷெலுக்கு பிறகு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற வின்சென்ட் கொம்பெனி தலைமையில் பயா்ன் மியுனிக் அபாரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பந்தெஸ்லிகா போட்டியில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த தனது சாதனையை பயா்ன் மியுனிக் தானே முறியடித்தது. இதற்கு முன் 1971-72 சீசனில் அந்த அணி 101 கோல்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்த நிலையில், நடப்பு சீசனில் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியிருக்க, இப்போதே 105 கோல்களை எட்டியுள்ளது அந்த அணி.