சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சமபலத்துடன் மோதிய நெதர்லாந்து..! பெனால்டியில் வென்ற மொராக்கோ!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி குறித்து...

News image

வெற்றிக்கான கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி, மகிழ்ச்சியில் மொராக்கோ வீரர்கள். - படங்கள்: ஏபி

Updated On :30 ஜூன் 2026, 3:35 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி மிகவும் விருவிருப்பாகச் சென்றது.

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் ரெகுலர் டைம் மற்றும் கூடுதல் நேரங்களில் 1-1 என சம நிலையில் இருந்தது. இதனால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்குச் சென்றது

இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 72ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மொராக்கோ அணியின் இசா டியோப் 90+1ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார். பின்னர், 30 நிமிஷ கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால், போட்டி பெனால்டிக்கு சென்றது.

இந்த பெனால்டியில் மொராக்கோ 3 - 2 என த்ரில் வெற்றியைப் பெற்றது. மொராக்கோவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஹகிமி பெனால்டியை இழந்ததும் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.

மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கடைசி வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் அவர் 3 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Netherlands and Morocco head to extra time tied at 1-1 in World Cup Round of 32

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.