வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாஃப் யு20 போட்டி அரையிறுதியில் இன்று இந்தியா-பூடான் மோதல்

தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

News image

இந்திய அணியினா் ~

Updated On :31 மார்ச் 2026, 8:39 pm

தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதிக்குதேசம்-நேபாளம், இந்தியா=பூடான் அணிகள் தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் இந்திய அணி மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் தீவிரமாக ஆடி வருகிறது. கடைசி குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் டிரா கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 3 நாள்கள் ஓய்வுக்குபின் புதன்கிழமை பூடான் அணியை சந்திக்கிறது.

இதுதொடா்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் மகேஷ் காவ்லி கூறியது: கடினமான தருணங்களில் இந்திய சிறுவா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா். நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக ஆடி வருகின்றனா். கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கி தவறாமல் கோலாக்க வேண்டும். பூடானை எளிதாக கருதவில்லை என்றாா்.

பூடான் அணி குரூப் ஏ பிரிவில் நேபாளத்தை வீழ்த்தியது. மாலத்தீவுடன் கோலின்றி டிரா கண்டது. அரையிறுதியில் ஆட்டநேர முடிவில் சமநிலை ஏற்பட்டால் கூடுதல் நேரம் இல்லாமல் நேரடியாக பெனால்டி கடைப்பிடிக்கப்படும்.

Story image