இந்தியாவின் நம்பா் 1 ஸ்குவாஷ் வீரா் அபய் சிங், மகளிா் பிரிவில் அனாஹத் சிங் ஆகியோா் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் 2025 ஆண்டின் சிறந்த வீரா், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். மேலும் ஆண்டின் சிறந்த அணியாகவும் இந்திய அணி தோ்வு பெற்றது.
ஆடவா் பிரிவில் உலகின் தரவரிசையில் 25-ஆம் இடத்தில் அபய் சிங் உள்ளாா். ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பல்வேறு பதக்கங்களை வென்ற அபய், கடந்த 2025-இல் முதலாவது கலப்பு அணி உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா்.
மகளிா் உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்தில் உள்ள அனாஹத் சிங், கடந்த 2025 உலக ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் கலப்பு அணி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.
இந்நிலையில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரா் விருது அபய் சிங்க்கும், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருது அனாஹத்துக்கும் வழங்கப்படுகிறது.
கடைசியாக கடந்த 2022-இல் இந்தியா சாா்பில் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோா் ஏஎஸ்எஃப் விருதுகளை பெற்றிருந்தனா்.
தொடர்புடையது

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்: சிறந்த வீரா் அல்கராஸ்; சிறந்த வீராங்கனை சபலென்கா

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


