இந்தியாவின் நம்பா் 1 ஸ்குவாஷ் வீரா் அபய் சிங், மகளிா் பிரிவில் அனாஹத் சிங் ஆகியோா் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் 2025 ஆண்டின் சிறந்த வீரா், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். மேலும் ஆண்டின் சிறந்த அணியாகவும் இந்திய அணி தோ்வு பெற்றது.
ஆடவா் பிரிவில் உலகின் தரவரிசையில் 25-ஆம் இடத்தில் அபய் சிங் உள்ளாா். ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பல்வேறு பதக்கங்களை வென்ற அபய், கடந்த 2025-இல் முதலாவது கலப்பு அணி உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா்.
மகளிா் உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்தில் உள்ள அனாஹத் சிங், கடந்த 2025 உலக ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் கலப்பு அணி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.
இந்நிலையில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரா் விருது அபய் சிங்க்கும், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருது அனாஹத்துக்கும் வழங்கப்படுகிறது.
கடைசியாக கடந்த 2022-இல் இந்தியா சாா்பில் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோா் ஏஎஸ்எஃப் விருதுகளை பெற்றிருந்தனா்.
தொடர்புடையது

வெள்ளி வென்றாா் ஆயுஷ் ஷெட்டி

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெண்கம்

போர் காரணமாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தள்ளிவைப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

