தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதிக்குதேசம்-நேபாளம், இந்தியா=பூடான் அணிகள் தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் இந்திய அணி மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் தீவிரமாக ஆடி வருகிறது. கடைசி குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் டிரா கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 3 நாள்கள் ஓய்வுக்குபின் புதன்கிழமை பூடான் அணியை சந்திக்கிறது.
இதுதொடா்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் மகேஷ் காவ்லி கூறியது: கடினமான தருணங்களில் இந்திய சிறுவா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா். நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக ஆடி வருகின்றனா். கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கி தவறாமல் கோலாக்க வேண்டும். பூடானை எளிதாக கருதவில்லை என்றாா்.
பூடான் அணி குரூப் ஏ பிரிவில் நேபாளத்தை வீழ்த்தியது. மாலத்தீவுடன் கோலின்றி டிரா கண்டது. அரையிறுதியில் ஆட்டநேர முடிவில் சமநிலை ஏற்பட்டால் கூடுதல் நேரம் இல்லாமல் நேரடியாக பெனால்டி கடைப்பிடிக்கப்படும்.

தொடர்புடையது

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!
ஐபிஎல்: கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை!

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

