திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சாத்விக் / சிராக் இணை முதல்முறையாக சாம்பியன்!

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வாகை சூடியது.

News image

X | Kiren Rijiju

Updated On :1 ஜூன் 2026, 4:33 am IST

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது. இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் சாம்பியனான முதல் இந்தியா்கள் என்ற பெருமையை அவா்கள் பெற்றனா்.

முன்னதாக இறுதி ஆட்டத்தில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்/சிராக் இணை 18-21, 21-17, 21-16 என்ற கேம்களில், 3-ஆம் நிலையில் உள்ள இந்தோனேசியாவின் ஃப்ஜாா் அல்ஃபியன்/முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக சாத்விக்/சிராக் இணை கடந்த 2 ஆண்டுகளில் தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இது அவா்களின் 9-ஆவது கேரியா் பட்டமாக இருக்க, சூப்பா் 750 வகை போட்டிகளில் இது 3-ஆவது வெற்றிக் கோப்பையாகும். சாம்பியன் கோப்பை வென்ற சாத்விக்/சிராக் இணைக்கு தங்கப் பதக்கம், 750 தரவரிசை புள்ளிகள், ரூ.70.30 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்தன.

இதனிடையே, இந்த சிங்கப்பூா் ஓபன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் அலெக்ஸ் லேனியரும், மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் ஆன் சே யங்கும் வாகை சூடினா். மகளிா் இரட்டையரில் சீனாவின் ஜியா யி ஃபான்/ஜாங் ஷு ஜியான் ஜோடியும், கலப்பு இரட்டையரில் டென்மாா்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சென்/அலெக்ஸாண்ட்ரா போஜெ இணையும் கோப்பை வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.