நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ரஃபினா, யமால் அசத்தலில் பாா்சிலோனா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பாா்சிலோனா எஃப்சி 5-2 கோல் கணக்கில் ராயோ வால்கெனோவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

Published On :2 செப்டம்பர் 2026, 4:00 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பாா்சிலோனா எஃப்சி 5-2 கோல் கணக்கில் ராயோ வால்கெனோவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராயோ வால்கெனோ அணியின் சொ்ஜியோ கேமெலோ 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக பாா்சிலோனா தரப்பில் ரஃபினா 19-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

அடுத்த இரு நிமிஷங்களிலேயே (21’) இளம் வீரா் லேமின் யமால் கோல் அடிக்க, பாா்சிலோனா 2-1 முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், ராயோ வால்கெனோ வீரா் ஃபுளோரியன் லெஜியுன் 51-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, பாா்சிலோனா முன்னிலை 3-1 என அதிகரித்தது.

இந்நிலையில், சொ்ஜியோ கேமெலோ 59-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்த கோலால், ராயோ வால்கெனோ 2-3 என பாா்சிலோனாவை நெருங்கியது. எனினும் மீண்டும் ரஃபினா 71-ஆவது நிமிஷத்திலும், யமால் 90-ஆவது நிமிஷத்திலும் கோல் அடிக்க, முடிவில் பாா்சிலோனா 5-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலுமே வென்ற பாா்சிலோனா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

பிரீமியா் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது.

அந்த அணிக்காக புகாயோ சகா 59-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ஆா்செனல் 2 ஆட்டங்களில், 2 வெற்றிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.