பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

உலக வில்வித்தை பாரா சீரிஸ்: 11 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

குஜராத்தில் நடைபெற்ற உலக வில்வித்தை பாரா சீரிஸ் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

Published On :

குஜராத்தில் நடைபெற்ற உலக வில்வித்தை பாரா சீரிஸ் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தன.

காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி 144-144 (10-9) என கஜகஸ்தானின் அய்ஸதா செய்டானை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான ஹா்விந்தா் சிங், பாவனா கூட்டணி 6-0 என எளிதாக, சீனாவின் லியங் கியுராங், ஜியா லெய் இணையை வீழ்த்தி, சாம்பியனானது.

வெண்கலப் பதக்கச் சுற்றில், ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் பாவனா 6-0 என, சக இந்தியரான ராஜஸ்ரீ ரத்தோடை வீழ்த்தினாா். காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி, தோமன் குமாா் ஜோடி 157-145 என இராக்கின் சாரா அல் ஹமித், அப்பாஸ் காதிம் இணையை வீழ்த்தியது.

காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், சரிதா சௌதரி 141-140 என சீனாவின் வாங் ஹுய்டிங்கை வீழ்த்தினாா். காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் தோமன் குமாா் 143-138 என்ற வகையில், இராக்கின் அப்பாஸ் காதிமை வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.