தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசு: இந்தியா 210 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2021, 3:55 pm

DIN


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவே களமிறங்கினர்.

கடந்த இரு ஆட்டங்களைப்போல் அல்லாமல் இம்முறை தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கியது ராகுல், ரோஹித் இணை. ஹமித் ஹாசன் மட்டும் கட்டுப்படுத்தினார். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, நடு ஓவர்களில் ரன் ரேட் உயராமல் சீராக சென்றுகொண்டிருந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா 37-வது பந்திலும், ராகுல் 35-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.

பின்னர் அதிரடிக்கு மாற, ரஷித் கான் ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. இதனால், ரன் ரேட் மீண்டும் ஓவருக்கு 9.5 ஐ தாண்டியது.

முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுல் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

21 பந்துகளே மீதமிருந்த நிலையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இருவரும் போட்டிபோட்டு சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.

இதனால், இந்திய அணிக்கு 17-வது ஓவரில் 15 ரன்கள், 18-வது ஓவரில் 15 ரன்கள், 19-வது ஓவரில் 19 ரன்கள் மற்றும் கடைசி ஓவரில் 16 ரன்கள் கிடைத்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பந்த் 13 பந்துகளில் 27 ரன்களும், பாண்டியா 13 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.