தோல்விக்குப் பிறகு அமெரிக்க அணித்தலைவர் உருக்கம்!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்க அணியின் அணித் தலைவர் உருக்கமாக பேசியுள்ளார்.
பந்தினை பவுண்டரிக்கு அடிக்கும் அமெரிக்க அணியின் அணித் தலைவர்.
பந்தினை பவுண்டரிக்கு அடிக்கும் அமெரிக்க அணியின் அணித் தலைவர்.Ricardo Mazalan
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்க அணியின் அணித் தலைவர் உருக்கமாக பேசியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் 128க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மே.இ,தீ. அணி 10.5 ஓவர்களில் 130/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் அமெரிக்க அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மே.இ.தீ. அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்துடன் கடைசி சூப்பர் 8 போட்டியில் விளையாட உள்ளது அமெரிக்க அணி.

பந்தினை பவுண்டரிக்கு அடிக்கும் அமெரிக்க அணியின் அணித் தலைவர்.
7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

இந்தத் தோல்விக்குப் பிறகு அமெரிக்க அணித் தலைவர் (கேப்டன்) ஆரோன் ஜோன்ஸ் கூறியதாவது:

இன்றைய இரவு எங்களது வீரர்களுக்கு கடினமான நாள். நாங்கள் 170- 180 ஆவது அடித்திருக்க வேண்டும். போட்டியின் பாதி ஓவர்களில் நாங்கள் அதிகமான விக்கெட்டுகளைப் பறிகொடுத்தோம். அதனால் அழுத்தத்தில் மாட்டிக்கொண்டோம். சில நேரங்களில் இப்படி நடக்கும். அப்படியாகினும் நாங்கள் அதிகமான ரன்களை அடித்திருக்க வேண்டும். பந்து வீச்சில் கடினமாக முயற்சித்தோம். இருப்பினும் மே.இ.தீ. அணியின் பேட்டிங் பலம் தெரியும்.

இங்கிலாந்து உடனான போட்டி நன்றாக இருக்கும். அதற்கான சவாலுக்கு தயார். இன்று ஓய்வெடுத்து ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு தயாராக வேண்டும். அமெரிக்க அணிக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவளித்தவர்களுக்கும் மிக்க நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com