இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியினால், இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், கடினமான சூழல்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எங்களது திறமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
சூப்பர் 8 சுற்றில் தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நாளை (ஜூன் 24) இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாடுவாரா?
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை



