ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம்: மிட்செல் மார்ஷ்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

News image

மிட்செல் மார்ஷ் - படம் | AP

Updated On :23 ஜூன் 2024, 6:16 pm IST

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியினால், இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், கடினமான சூழல்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எங்களது திறமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.

சூப்பர் 8 சுற்றில் தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நாளை (ஜூன் 24) இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.