இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை... இந்திய அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத்தொகையாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி மிகவும் உறுதியுடன் சிறப்பாக செயல்பட்டது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com