வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வெள்ளரி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் லாபம்

பண்ருட்டி, ஏப்.28:  ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பண்ருட்டி வட்டத்தில் சிற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:49 am

பண்ருட்டி, ஏப்.28:  ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

பண்ருட்டி வட்டத்தில் சிறுவத்தூர், வையாபுரிபட்டணம், ஏரிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சுகள் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடப்படுகிறது. இதன் பழங்களை நேரடியாகவும், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். பிஞ்சாகவும், பழமாகவும் பயன்படும் வெள்ளரி கோடைக் காலத்துக்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்ட சிறந்த உணவாகும்.

பண்ருட்டி பகுதி விவசாயிகள் விதை எடுப்பதற்காகவே வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். இது குறித்து சிறுவத்தூர் வெள்ளரி விவசாயி தியாகராஜன் கூறியது: வெள்ளரி 3 மாத பயிர். வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்வதில்லை. வெள்ளரி பழத்தில் உள்ள விதைதான் எங்கள் முக்கிய இலக்கு.

இந்த விதைகளை சுத்தம் செய்து இனிப்பு மற்றும் பாக்கு கலவையில் பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் விதைகளை தண்ணீரில் அலசி காயவைத்து வைத்தால் வியாபாரிகள் வீட்டில் வந்தே வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 150 கிலோ விதை கிடைக்கும். விதை விற்பனை மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைக்கிறது.

விதை நீக்கப்பட்ட வெள்ளரிப் பழம் ஒன்று ரூ. 2 முதல் 4 வரை விலை போகும். இதை வெள்ளரி பழ வியாபாரிகள் தோட்டத்தில் வந்து வாங்கி செல்வர். இல்லை என்றால் தோட்டத்திலேயே போட்டு விடுவோம். பழம் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தோட்ட பராமரிப்பு, மருந்து மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டிவிடும் என்றார் தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.