மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விதைகளை எளிய முறையில் பாதுகாக்கும் விதை கலசங்கள்

சிதம்பரம்,மே 19: கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் விதைகள் வர்த்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்கள், ஒட்டு ரகங்கள் அதிக விலையில் வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:25 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்,மே 19: கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் விதைகள் வர்த்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்கள், ஒட்டு ரகங்கள் அதிக விலையில் வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது.

இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவில் வேளாண் சாகுபடிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும் விதைக் கலசங்கள் பெரிதும் உதவி செய்கின்றன.

பயன்பாட்டு முறைகள்: பல்லாண்டுகளாக தமிழக கிராமங்களில் விதைகளை மண் பானைகளில் பாதுகாக்கும் முறையே தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் விவசாயிகள் பல சிறு தானிய மற்றும் பயிர் வகைகளை எளிதான முறையில் நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக பாதுகாக்க விதைக் கலசங்களை பல முன்னோடி முற்போக்கு பாரம்பரிய விவசாயிகள் உருவாக்கி வெற்றிகரமாக குறைந்த செலவில் தங்களின் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த புதிய விதை பாதுகாப்பு முறையில் விவசாயிகள் தங்களின் விதைத் தேவை, நிலத்தின் அளவு, சாகுபடி செய்யப்படும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு விதைத் கலசங்களை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாரம்பரிய குயவர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் உறுதியான மண் கலசங்கள் நன்றாக சுத்தப்படுத்தி வெய்யிலில் காய வைக்கப்படுகிறது. பின்னர் விதைகளை நன்றாக சுத்தப்படுத்தி, அரிப்புகள் கொண்டு களை விதைகள், இதர வேளாண் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு வேம்பு, நொச்சி மற்றும் தங்கள் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணமுள்ள மூலிகை இலைகள், சிறிய துண்டுகளாக மஞ்சள் கலக்கப்பட்டு பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பின்னர் விதைகள் பானைகளில் உள்ள தடுப்புகளில் வைத்து தனித்தனியாக நீண்ட காலத்துக்கு பாதுகாக்கப்படுகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒரு விதைக் கலசத்தைச் கொண்டே பல ரக விதைகள், பல பயிர்களின் விதைகளை எதிர்கால தேவைக்கு எளிதாக பாதுகாக்க முடியும்.

பெரிய விவசாயிகள் தங்களின் சாகுபடி தேவை மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பெரிய அளவு விதை கலசங்களில் அதிகளவில் விதைகளை சேகரித்து எளிதாக பயன்படுத்தி அதிகளவு பொருளாதார லாபங்களை பெற முடியும்.

சிறு தானிய விதைகள், தீவனப் பயிர்களின் விதைகள், மூலிகைப் பயிர்களின் விதைகள், காய்கறி விதைகளையும் நீண்ட காலத்துக்கு எளிதாக பாதுகாக்க முடியும்.

பிற பயன்கள்: விதைக் கலசங்களைக் கொண்டு தமிழக விவசாயிகள் நீண்ட காலத்துக்கு விதைகளை பாதுகாத்து, குறைந்த செலவில் வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெற முடியும்.

பாரம்பரிய விதைகளுக்கு அதிகளவு வர்த்தக வாய்ப்புகள் உள்ள நிலையில் நமது விவசாயிகள் விதைக் கலசங்கள் வாயிலாக விதைகளை பாதுகாத்து விதை வர்த்தகம் மற்றும் வணிகத்தில் நல்ல வருமானம் பெறலாம்.

சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், சுயஉதவிக் குழுவினர் குறைந்த செலவில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ள இந்த விதைக் கலசங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே குறைந்த செலவில் அதிக லாபம் பெறவும், நமது பாரம்பரியமிக்க விதைச் செல்வங்களை பாதுகாக்க உதவும் விதைக் கலசங்களை பயன்படுத்தி தமிழக விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.