மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பழனி கோயில் உண்டியல் வரவு ரூ.1.35 கோடி

பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 5:43 pm

பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

கோடை கால விடுமுறையை முன்னிட்டு, பழனிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என லட்சக்கணக்கானோர் வந்து சென்றதால், கடந்த 23 நாள்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்தன. எனவே, செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரத்து 645 ரொக்கப் பணமாகக் கிடைத்துள்ளது.

மேலும், பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமான பொருள்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.