கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்: தாராபுரம் தொழிலதிபர் பேட்டி

வருமானவரித் துறை விசாரணை முடிந்த பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை வெளிவரும் என தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:10 pm

தினமணி

வருமானவரித் துறை விசாரணை முடிந்த பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை வெளிவரும் என தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராமலிங்கம். இவரது வீட்டில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகக் கோரி ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, வருமானவரித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி, சனிக்கிழமை வீடு திரும்பிய ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:

வருமானவரித் துறையினர் என்னிடம் பல கோணங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு உண்மையான பதிலை முழுமையாக அளித்துள்ளேன். வழக்கு விசாரணை முடிந்த பிறகு உண்மை வெளிவரும்.

ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நண்பர் டெனியலிடம் வாங்கினேன். கடந்த 2005ஆம் ஆண்டு கடும் கடன் பிரச்னையில் இருந்த நான், அறிவைப் பயன்படுத்தி உண்மையாக முன்னேறி உள்ளேன்.

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் ஜனவரி 11ஆம் தேதி வருமான வரித்துறையினர் முன் ஆஜராக உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.