கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஏரி வாய்க்காலை தூர் வாரக்கோரி : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

ஏரி, வாய்க்கால்களை தூர்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

News image
Updated On :2 ஏப்ரல் 2015, 12:52 pm

ஜி.சுந்தரராஜன்

ஏரி, வாய்க்கால்களை தூர்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழுக் கூட்டம் புவனகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாதவன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசு, தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், நாகப்பன், ரவி, சம்பத், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜிப்பான் ஏரியை தூர் வார வலியுறுத்தியும், மஞ்சகொல்லை-உளுத்தூர் சாலையை செப்பணியிட்டு கிளை வாய்க்கால்களை தூர் வார வலியுறுத்தி ஏப்.23 ம் தேதி விருத்தாச்சலம்-புவனகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஞ்சகொல்லை என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.