இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த கோரிக்கை

தமிழகத்தில் நல்ல வருவாய் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள 200 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு பேரூராட்சி

News image
Updated On :2 மார்ச் 2015, 1:06 pm

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தில் நல்ல வருவாய் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள 200 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ், முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு தற்போது 180 பேரூராட்சிகளை, தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலாவது கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்திவிட்டு பின்னர், பேரூராட்சிகளை தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் நல்ல வருவாய் மற்றும் கூடுதல் மக்கள் தொகையுள்ள முகவூர், தளவாய்புரம், ஆலங்குளம், சத்திரப்பட்டி, கூரைக்குண்டு ஆகிய 6 கிராம ஊராட்சிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 200 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி, அதற்கான செயல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிவிட்டு, பேரூராட்சிகளை தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இக் கோரிக்கை மனு உள்ளாட்சித் துறை அமைச்சர், பேரூராட்சிகளின் இயக்குநர், உள்ளாட்சித் துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.