பின்னர் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு, ஏடிஎஸ்பி திருமலைசாமி தலைமையிலான போலீஸார் அவர்களை குண்டு கட்டாக கம்யூ கட்சியினரை தூக்கி வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீஸார் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, விவசாய சங்கத் தலைவர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச்செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோரை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்ற முயன்ற போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவின் போது கே.பாலகிருஷ்ணன் மயக்கமடைந்தார். எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அருகே உள்ள காவேரி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரும், காயமடைந்த எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மறியலில் ஈடுபட முயன்ற 76 பேரை போலீஸார் கைது செய்தனர்.