முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2016, 11:49 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷத்தையொட்டி 3 நாள்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சதுரகிரி மலையில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்களில் ஆடி அமாவாசை விழாவையொட்டி கடந்த 28-ம் தேதி முதல் சதுகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மற்றும் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே சதுரகிரி மலையடிவாரப் பகுதியான வண்டிப்பணணையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று காலை 3 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.காலை சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறியதாலும், மலையில் பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மலையேறினர்.

பல இடங்களில்  போலீஸார் தடுப்புகள் அமைத்து பக்தர்களை நிறுத்திவைத்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அனுப்பினர். மலையடிவாரப் பகுதியிலும் சதுரகிரி மலையில் உள்ள திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.