இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக மக்களுக்கு முக்கியச் செய்தி: புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பு

வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2016, 7:11 am

DIN


சென்னை: வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நடா புயல் தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழையைத் தராமல் போனாலும், வறண்ட வானிலையை மாற்றிச் சென்றது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைப் பொழிவுக்கும் காரணமாக இருந்தது.

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் உருவான கியான்ட் மற்றும் நடா புயல்கள் தமிழகத்தை ஏமாற்றிவிட்டாலும், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால்  தமிழகத்துக்கு மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்த்தபடி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறும்பட்சத்தில், இதற்கு வர்டா என்று பெயரிடப்படும். (இந்த பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது)

இந்த வர்டா புயல் காரணமாக தமிழகத்தில் மழைப் பற்றாக்குறை என்ற நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.