இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இன்னும் நான்கு நாட்களுக்கு பெரிய அளவில் மழை கிடையாது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததன் காரணமாக இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2016, 9:24 am

DIN

சென்னை: புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததன் காரணமாக இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  கடந்த 30ம் தேதி தொடங்கியது. தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும்  பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததால் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை. இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் லேசான சாரல் மழை மட்டுமே விழக்கூடும். இதனால் வெப்பம் அதிகரிக்கும். இருப்பினும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று உருவான வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.