அழகாபுரியை அடுத்து மாயிருளம்பட்டி விலக்கு அருகே கோயமுத்தூர் பேருந்தை, சத்தியமங்கலம் பேருந்து முந்திச் செல்ல முயன்றது. அப்போது கிருஷ்ணன்கோவிலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (53), மங்கலம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த ராஜூ (43) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். முந்திச் செல்ல முயன்ற சத்தியமங்கலம் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்புராஜ் மற்றும் ராஜூ உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநர்கள் என்பது தெரியவந்தது. தகவலின் பேரில் கிருஷ்ணன்கோவிலில் வைத்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.