மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி சட்டப்பேரவையில் குழுக்களை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? அதிமுக கேள்வி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2016, 7:17 am

சுஜித்குமார்


புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ. அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையி்ல் மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழு, பொதுக்கணக்கு குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைக்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மேலும் தமிழக ஆளுநரிடம் புகார் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்வதற்கு முன்பு அவர் தங்களது கட்சி கூட்டணி வைத்துள்ள புதுச்சேரியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு செயல்பாடுகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். புதுவைில் தேர்தல் நடைபெறறு 5 மாதங்கள் ஆகின்றன. சட்டப்பேரவையில் மனுக்கள் குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்கு குழு உள்பட 12-க்கு மேற்பட்ட குழுக்களை இதுவரை அமைக்க நாராயணசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழுக்களுக்கு முறையாக பேரவையில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் எதையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்து வாரா. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா என்பதை ஸ்டாலி்ன் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.