தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலி: புதிய ஆணையர் நியமனம் எப்போது?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலி: புதிய ஆணையர் நியமனம் எப்போது?

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த பெ. சீத்தாராமனின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த 22-ம் தேதியுடன் முடிவடைந்தது.

மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கெடு விதித்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது.

இதுவரை புதிய ஆணையர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையராக மீண்டும் பெ. சீத்தாராமன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com