திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது காவல் நிலையத்தில் புகார்

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 11:08 am IST

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீபா பேரவைச் சேர்ந்த நிர்வாகி ஜானகிராமன் என்பவர் அளித்துள்ள அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் பொருளாளராக தான் இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மறுநாளே, அந்த அமைப்பின் பொதுச் செயலராகவும் தான் இருப்பதாக தீபா கூறினார்.

அதேவேளையில், சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்து ரத்து செய்தார். ஆனால் அதை தீபா எங்களிடமிருந்து மறைத்துவிட்டார்.

இதற்கிடையில், உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தீபா அறிமுகப்படுத்தினார். பேரவையில் உறுப்பினராக சேருவதற்கு அந்தப் படிவத்தை ரூ.10 கொடுத்து வாங்கி நிரப்பி, நிர்வாகிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு அவர், சுமார் 2 லட்சம் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தார்.

எனது மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக 5 ஆயிரம் படிவங்களை ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். ஆனால் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படவில்லை. உறுப்பினர் படிவத்தில் இருந்த முகவரியும், பேரவையின் முகவரியும் மாறுப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் அந்த படிவத்தில் இருந்தன.

உறுப்பினர் படிவம் மூலம் ரூ.20 கோடி வரை பெற்றுக் கொண்டு, தீபா மோசடி செய்துள்ளார். எனவே தீபா மீதும், அவருடன் மோசடிக்கு துணைபோகும் ராஜா, சுகன்யா மீதும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.