இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கார்த்தி சிதம்பரத்தினை  'தேடப்படும் நபராக' அறிவித்த நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! 

கார்த்தி சிதம்பரத்தினை  'தேடப்படும் நபராக' அறிவித்த நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2017, 10:37 am

DIN

சென்னை: கார்த்தி சிதம்பரத்தினை  'தேடப்படும் நபராக' அறிவித்த நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் காரணமாக , முன்னாள் மத்திய அமைச்சர்

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, பாஸ்போர்ட் சட்டத்தின்படி மத்திய உள்துறை அமைச்சகம் 'தேடப்படும் நபராக' அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்து கடந்த 4-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இம்மாத இறுதியில் தான் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 'லுக் அவுட்' நோட்டீஸ் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு அறிவிப்பதாக அரசு வழக்குரைஞர் கூறியதை அடுத்து வழக்கு 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கார்த்தி சிதம்பரத்தின் வேண்டுகோளினை ஏற்று,  அவர் மீதான 'தேடப்படும் நபராக' அறிவித்த லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.