இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜல்லிக்கட்டு கலவர வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம்! 

ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து ...

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 7:26 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தொடங்கி ஆறுநாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 23-ஆம் தேதியன்று  நிகழந்த கலவரத்தில் பலர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களும் சேதபடுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.