ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆதரவற்ற பெண் என்ற அடையாளத்தை மாற்றிய தமிழச்சி: யுபிஎஸ்சி தேர்வில் எஸ்சி பிரிவில் முதலிடம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது மாணவி இலக்கியா, யுபிஎஸ்சி தேர்வில் எஸ்சி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2017, 11:53 am

DIN


வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது மாணவி இலக்கியா, யுபிஎஸ்சி தேர்வில் எஸ்சி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆதரவற்ற பெண் என்ற அடையாளத்தை இன்று மாற்றி அமைத்து சாதித்துள்ளால் இலக்கியா. எந்த தடைக்கல்லும் எனக்குப் படிக்கல்லே என்று செய்து காட்டியுள்ளார். பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில், தனது உறவினரின் பராமரிப்பில் வளர்ந்த இலக்கியா, யுபிஎஸ்சி தேர்வில் 298வது ரேங்க் பெற்றுள்ளார்.

இது குறித்து இலக்கியா கூறுகையில், எனது உறவினர் வேதநாயகிதான் எனக்கு முன்னோடி. அவர் தான் என்னை ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்து, முதுநிலைப் பட்டப்படிப்பில் சமூகப் பணியை எடுத்துப் படிக்குமாறு கூறினார். அவரது வழிகாட்டுதல்தான் நான் அடைந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.

இலக்கியா ஏழாம் வகுப்பு படித்த போது கார் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்தார். அதன்பிறகு, இலக்கியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகளையும் வேதநாயகிதான் பராமரித்து வந்தார்.

அரசு சாரா அமைப்பில் பணியாற்றி வந்த வேதநாயகி, மிகவும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் பணியாற்றி வருகிறார். நானும் அவரைப் போலவே பின்தங்கிய மக்களுக்காகப் பணியாற்ற விரும்புகிறேன் என்கிறார்.

"என் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால், அவர் இறந்த பிறகு, எனக்கு 18 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறவில்லை. அரசு நடைமுறைகள் அவ்வளவு காலம் எடுத்தன. எங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. ஆனால், எங்கள் தாய் போல அவர் பராமரித்து வந்தார்" என்று வேதநாயகி குறித்து குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.