லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கரிசல் எழுத்தாளர் கழனியூரன் காலமானார்

கரிசல் மண் எழுத்தாளரான கழனியூரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) சென்னையில் காலமானார்.

Updated On :28 ஜூன் 2017, 3:44 am IST

கரிசல் மண் எழுத்தாளரான கழனியூரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான கழுநீர்குளம் கிராமத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் 1954 இல் பிறந்தார் கழனியூரன். அவரது இயற்பெயர் எம்.எஸ். ஷேகுஅப்துல்காதர். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
நெல்லை நாடோடிக் கதைகள், நாட்டுப்புற நீதிக் கதைகள், நாட்டுப்புறத்து நகைச்சுவை கதைகள், வேரடி மண் வாசம், செவக்காட்டு மக்கள் கதைகள், நாட்டுப்புற கதைக் களஞ்சியம் உள்பட 45 நூல்கள் எழுதியுள்ளார். இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி., எழுத்தாளர் கி. ராஜநாராயணன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களில் கதை சொல்லியின் கதை, நெல்லை நாடோடிக் கதைகள், மண் மணக்கும் மனுஷங்க, செவக்காட்டு மக்கள் கதைகள், நடை வண்டி, காட்டுப் பூவின் வாசம், நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவை முக்கியமான நூல்களாகும். கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் ஏற்பட்ட தொடர்பால் தன்னையும் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டதுடன், கழனியூரன் என்ற பெயரில் எழுதி வந்தார்.
அண்மையில் தினமணி வெளியிட்ட ஈகைப் பெருநாள் மலரில் இஸ்லாமிய நாட்டுப்புறவியல் எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் சந்தோஷ்புரத்தில் மகனுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு காலமானார்.
அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். முஹம்மதுஷா என்ற மகனும், பானு என்ற மகளும் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான கழுநீர்குளத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு; 98840 37855.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.