டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்பு; திமுக வேட்பாளரின் ஆட்சேபணை நிராகரிப்பு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது குறித்து திமுக வேட்பாளரின் ஆட்சேபணை மனு நிகராரிக்கப்பட்டது. இதனால், வேட்பு மனு ஏற்பில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ், தேர்தல் அதிகாரிகளிடம் ஆட்சேபணைத் தெரிவித்தார்.
அதாவது, டிடிவி தினகரன் இந்திய குடிமகன் அல்ல எனவும், அன்னிய மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும், இதில் அவர் தண்டிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அபராதத் தொகை அதிகம் என்று கூறித் தான் தினகரன் சார்பில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், இவரது கோரிக்கையை தேர்தல் ஆணைய அதிகாரி நிராகரித்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...