சென்னை: சென்னையில் ஜூன் 3ம் தேதி நடைபெறும் திமுகவின் வைர விழாவில் கட்சித் தலைவர் கருணாநிதி பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரைமுருகன் கூறினார்.
மேலும், சென்னையில் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் திமுகவின் வைர விழாவில் கருணாநிதி பங்கேற்பார் என்றும், அப்போது அவர் தொண்டர்களை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களாக தொண்டர்களை சந்திப்பதை கருணாநிதி தவிர்த்து, வீட்டில் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் திமுக வைர விழாவில் பங்கேற்க இருப்பது திமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.