மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர்ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் ...

News image
Updated On :12 மே 2017, 4:38 pm IST

சென்னை:  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்ட காட்பாடியை சேர்ந்த காண்ட்ராக்டர் சேகர்ரெட்டி.அவரது வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில்,  178 கிலோ தங்க ம் மற்றும் ரூ.142 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

தன் மீதுசி.பி.ஐ தொடர்ந்த வழக்குகளில் சேகர் ரெட்டி கடந்த மாதம் 20-ஆம் தேதி ஜாமீன் பெற்றார். ஆனால் அவர் மீது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடுத்த அமலாக்கத்துறை அவரை மீண்டும் கைது செய்தது.

இந்நிலையில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களிருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிபந்தனை ஜாமினுக்கான பிணைப்பாத்திரங்களை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்வதோடு, தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சேகர் ரெடியுடன் கைது செய்யப்பட்ட பொதுப்பணித்துறை மணல் காண்ட்ராக்டர்களான ராமசந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம்  நிராகரித்து விட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.