16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சோரியாங்குப்பம் மதுக்கடைகள் மீது தாக்குதல் சம்பவம்: 9 பேர் கைது

சோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக்கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Published On :

சோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக்கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கவும், ஏற்கெனவே உள்ள கடைகளை மூட வலியுறுத்தியும்  அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்பட்ட போது போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்குள்ள மதுக்கடைகள் மீது கல் வீசி தாக்கியும் ,  மது கடைகளுக்கு தீ வைத்து எரித்ததனர்.

அப்போது போலீசார் போராட்டக்கார்களை தடியடி நடத்தி கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டர்னர். இதனையடுத்து சோரியாங்குப்பம் கிராமத்தை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த  புகழ், ஜெகன், அமுதன், ராஜ்குமார், முருகன், ஆறுமுகம், செல்வம், அரியபாரதி, சிவானந்தம் உள்ளிட் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.